Published : 25 May 2015 05:08 PM
Last Updated : 25 May 2015 05:08 PM

தாய்மொழிக் கல்வி தலைவர்களையும் உருவாக்கும் - கிருபாநிதி

கட்டுரை:>என்னது, அரசுப் பள்ளி மாணவர்கள் படிக்க மாட்டார்களா? - சொல்லாமல் அடித்த 3 கில்லிகள்!

'தி இந்து' ஆன்லைன் வாசகர் கிருபாநிதி கருத்து:

எதிர்மறை விமர்சனங்களைத் தாண்டி சமச்சீர் கல்வி தந்தது ஏற்றத்தாழ்வற்ற ஆடுகளம். சீரிய ஆய்வுக்குப்பின் வந்த செயல்முறைக் கல்வி பழமை மிகு மெக்காலே முறையை ஒழித்து நவீனப்படுத்தும் ஓர் அரிய முயற்சி.

முப்பருவ பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு முறை கல்விச்சேவையை அடுத்த தலைமுறை வடிவத்திற்கு எடுத்துச்செல்லும் அற்புத முயற்சி. மாற்றங்களைத் தாண்டி, தமிழக அரசின் நிர்வாக மேன்மை முத்திரைகள் இவை.

கல்வித்துறை இந்த சேவைச்செயல் முறையில் உள்ள நடைமுறை சிக்கல் கலைத்து ஆசிரியர்கள் மனம் இணைத்து தெளிவுடன் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்தால், அவ்வாறு உன்னத சேவை தரும் ஆசிரியர்களை கவுரவித்தால், அரசின் கல்விச்சேவை தனியார் பள்ளிகளுக்கு ஆரோக்கியமான சவாலாக அமையும். தாய்மொழிக் கல்வியும் தலைவர்களையும் உருவாக்கும் என்பது நிரூபணமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x