Published : 26 May 2015 06:27 PM
Last Updated : 26 May 2015 06:27 PM

பலவீனமான அரசை நடத்துகிறீர்கள்: பாலசுந்தரம்

செய்தி: ஏழைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறது அரசு: மக்களுக்கு பிரதமர் மோடி திறந்த மடல் 'தி இந்து' ஆன்லைன் வாசகர் பாலசுந்தரம் கருத்து:

இந்திய மக்களாகிய நாங்கள் அத்வானி, ஜோஷி, சின்ஹா வாஜ்பாய் போன்றவர்களை நம்பி புதிய அரசை தேர்வு செய்தோம். நீங்கள் இவர்களை டெல்லி பழைய சுல்தான்களை போல் குப்புற தள்ளிவிட்டு அவர்களின் சிம்மாசனத்தை எடுத்து கொண்டு,அதில் நீங்களாகவே அமர்ந்து கோலோச்சுகிறீர்கள். இது சரியில்லை.

பழைய மூத்த தலைவர்களான அத்வானி, ஜோஷி ,சின்ஹா உள்ள பீஜேபீ தான் நாட்டை ஆளவேண்டும். உங்களுக்கு ஆற்றல் போதாது. உங்களுக்கு ஆளுமை இல்லை. நீங்கள் உங்களை வீணே ஜோடித்துக் கொண்டு ஆர்ப்பாட்ட அரசியல் நடத்துகிறீர்கள் உங்களால் நாட்டை முன் எடுத்து செல்ல முடியாது. நீங்கள் இளையவர்களையும் அனுபவம் இல்லாத வர்களையும் மந்திரிசபையில் வைத்துக் கொண்டு பலஹீனமான அரசை நடத்துகிறீர்கள்.

உங்களால் பாகிஸ்தான், சீன, இலங்கை நேபாளம் போன்ற நாடுகளை சமாளிக்க முடியாது. உங்களால் சீன எல்லைப் பிரச்சனை தீர்க்க முடியாது. இலங்கை தமிழர் பிரச்சனை தீர்க்க முடியாது. நேபாள உள்நாட்டுப் பிரச்சனை தீர்க்க முடியாது. உங்களால் ஏகப்பட்ட டிரஸ் களைத்தான் உங்களின் 18 வெளிநாட்டு பயன்களில் மாற்ற முடிந்தது. நீங்கள் ஏழை இந்தியாவின் பிரதமர் அல்ல. செல்வா செழிப்பு மிக்க குஜராத் முதல்வராகவே இருகிறீர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x