Published : 14 May 2015 05:04 PM
Last Updated : 14 May 2015 05:04 PM

ஆயிரம் கோடி மிச்சமாகும்: வள்ளுவன்

செய்தி:>அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

' தி இந்து' ஆன்லைன் வாசகர் வள்ளுவன் கருத்து:

மூன்று பேருமே டெல்லி ஆளுங்கதான்? அப்ப மாநிலத்தில் யாருக்கும் இந்த தகுதி இல்லையா ? பிரதமர் சொல்வதை தானே ஜனாதிபதி சொல்கிறார்? எப்போதாவது அவர் தனியாக செயல்படுகிறாரா? பிறகு எதற்கு இந்த இரண்டு பேர் படங்களும்.

மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல்வர் படம் வேண்டாம் ஆனால் 6 மதத்திற்கு ஒரு முறை மாறும் உச்ச நீதிமன்ற நீதிபதி படம் எதற்கு? அப்படி என்றால் நாளைக்கே குமாரசாமி உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகி விட்டால் அவர் படம்தான் வருமா? முதலில் எந்த அரசும் சுய விளம்பரம் செய்யக் கூடாது என்று சொல்லுங்கள். அதை ஏற்றுக்கொள்ளலாம்.

அரசு டெண்டர்களை கூட இனி எந்த செய்தி தாள்களிலும் கொடுக்க கூடாது அரசிதழ்களில் (gazettes) மட்டும் வெளியிட வேண்டும். தேவைப் படுபவர்கள் மட்டும் அதை காசு கொடுத்து வாங்கி பார்க்கட்டும். இதனால் அரசுக்கு குறைந்தது 1000 கோடி மிச்சம் ஆகும்.

விளம்பரங்களால் தான் இன்று பல செய்தி நிறுவனகள் அரசு செய்யும் தவறுகளை வெளிப்படுத்துவது இல்லை. சில அரசுகள் கூட இதை வைத்து செய்தி நிறுவனங்களை மிரட்டுகின்றது. இதனால் பத்திரிகைகள் நடுநிலை தவறவும் வாய்ப்பிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x