Published : 26 May 2015 06:26 PM
Last Updated : 26 May 2015 06:26 PM

செய்து முடித்த பிறகே உலகிற்கு சொன்ன தலைவி - தங்கராஜ்

செய்திக் கட்டுரை:>மதுபானக் கடை இல்லாத கிராமம், மழைநீர் சேகரிப்பில் முன்மாதிரி கிராமம்! - 20 ஆண்டுகளாக சாதித்து வரும் ஊராட்சித் தலைவி!

'தி இந்து' ஆன்லைன் வாசகர் தங்கராஜ் கருத்து:

இந்த காலத்தில் பெரிய பெரிய அரசியல் மாமேதைகள் என்று தன்னை தானே சொல்லி தம்பட்டம் அடித்து கொள்பவர்கள் கூட என்னிடம் அந்த திட்டம் இருக்கிறது இந்த திட்டம் இருக்கிறது என்று ஆயிரம் திட்டங்களை சொல்லி மக்களின் வரி பணத்தையும் பறித்து அவர்களின் காதுகளுக்குள் நண்டு நட்டுவாக்காலிகளையும் அள்ளி தினிப்பார்களே ஒழிய அதை செய்து முடிக்க மாட்டார்கள்.

ஆனால் பெரும் மதிப்புக்குரிய இந்த அம்மையார் கூறியது அனைத்தும் நமது காதுகளில் தேன் வந்து பாய்ந்தது போல் இருக்கிறது. ஏனென்றால் பஞ்சாயத்திற்கு தேவையான அனைத்து காரியங்களையும் செய்து முடித்த பின்னர்தான் உலகிற்கே தெரிவித்திருக்கிறார்.

திட்டம் என்று கூறி மக்களை ஏமாற்றாமல் நேராகவே செயல்முறையில் இறங்கி வெற்றியும் கண்டுள்ளார். இவரல்லவோ தமிழ்த்தாய் பெற்றெடுத்த மகா புத்திரி. தலை வணங்குவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x