Published : 08 May 2015 01:28 PM
Last Updated : 08 May 2015 01:28 PM

பிரபலங்களும் சட்டத்தை மதிக்க வேண்டும்: உகதி

கருத்துக்கணிப்பு:>சல்மானுக்காக கலங்குவது எத்தகையது?

'தி இந்து' ஆன்லைன் வாசகர் உகதி கருத்து:

திரை நட்சத்திரங்களும் சாதாரண மனிதர்களே. அதுவும் சல்மான் கான் 13 வருட நீதிமன்ற விசாரணைக்குப் பிறகே தண்டிக்கப் பட்டிருக்கிறார் - போலிசாரால் குற்றவாளி என்று சந்தேகிக்கப் பட்டு என்கௌண்டர் செய்யப் படவில்லை.

காசுள்ள பிரபல மனிதர்களால் விசாரணையை 13 வருடங்களுக்கு இழுக்க முடிகிறது - சாமானியர்களால் கண்டிப்பாக இது முடியாது.

சல்மானின் தண்டனை பற்றிய கவலை தாங்களும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்கிற எண்ணத்தை மட்டுமே ஏற்படுத்த வேண்டும். மாறாக, தாங்கள் பிரபலமாக இருப்பதினால் தங்கள் தவறுகள் கண்டுகொள்ளப் படக்கூடாது என்பது தவறான கலாச்சாரமே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x