Published : 07 May 2015 03:19 PM
Last Updated : 07 May 2015 03:19 PM

ஹீரோக்களின் நிஜ உலகம் வேறு: பீ.காதிர்

கருத்துக்கணிப்பு:>சல்மானுக்காக கலங்குவது எத்தகையது?

'தி இந்து' ஆன்லைன் வாசகர் பி.காதிர் கருத்து

சக கலைஞர் என்ற முறையில் அவருடன் பல வகையில் தொடர்பில் இருப்பவர்களால் கருத்துப் பகிர்வை தவிர்க்க இயலாது. சல்மான் கார் ஓட்டுநரின் மொத்த குடும்பமும் மனதளவில் நிம்மதி பெருமூச்சு விட்டுருக்கும்.

இந்த வழக்கு தவிர மான் வேட்டை வழக்கு, பெண் நண்பிகளை அடித்ததாக செய்தி, ஐஸ்வர்யா ராய் வீட்டுக்குச் சென்று கலாட்டா செய்த செய்தி என அவர் சர்ச்சைகளில் அடிப்பட்டுள்ளார். தான் ஒரு பிரபலம் என்பதால் தனக்கு எதுவும் நேராது என நினைக்கிறாரோ?

நீதிமன்றங்கள் மீது சாமான்ய மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. சாமான்ய மக்களின் பணத்தில் உண்டு கொழுக்கும் "ஆக்சன் ஹீரோ"க்களும் ஹீரோயின்களும் நிஜ உலகம் வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே சாமான்ய மக்களின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x