Published : 28 May 2015 06:53 PM
Last Updated : 28 May 2015 06:53 PM

ஆட்சியில் மக்கள் முன்னேற்றமும் வேண்டும்: எத்திராஜூ

தலையங்கம்:>நல்ல நாட்களுக்காகக் காத்திருக்கும் தேசம்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் எத்திராஜூ கருத்து:

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஊறிப்போன ஊழல் நாகரிகம் ஒரே ஆண்டில் எங்கிருந்து மறையும். அதிலும் எதிர்க்கட்சிகள் மக்களுக்கு நன்மை செய்கிறதோ இல்லையோ ஆளுங்கட்சிக்கு நல்லபேர் வரக் கூடாதென்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.

எந்த ஒரு நல்ல திட்டத்தையும் ராஜ்ய சபாவில் முறியடிக்கின்றனர். இவ்வளவு எதிர்ப்புகளுக்கு இடையேயும் இன்னும் சற்று சமயோசிதமாக செயல்பட்டு இருக்கலாம். அதை தவறவிட்டது பாஜக. ஊழல் இல்லாமல் இருப்பது மட்டுமே ஒரு ஆட்சியின் நேர்மையை கணிக்காது.

மக்களுக்கு எந்த அளவிற்கு இவர்களின் நல்லாட்சி பலன்கள் சென்று அடைகிறது, தேசத்தின் எதிர்காலம் பற்றி ஆளுங்கட்சி என்ன நடவடிக்கையில் ஈடுபடுகிறது போன்ற இன்னும் பலவிதமான மக்கள் முன்னேற்றத்திற்கான செயல்களை வைத்தே இவர்களின் ஆட்சிமுறை எடைபோடப் படுகிறது. இதை உணர்ந்து பாஜக செயல்படவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x