Published : 26 May 2015 06:27 PM
Last Updated : 26 May 2015 06:27 PM

நல்ல வீரர்களை அணியில் சேர்க்க வேண்டும் - அஜிஸ்

கருத்துக்கணிப்பு:>ஐபிஎல் சீசன் 8 எப்படி இருந்தது?

'தி இந்து' ஆன்லைன் வாசகர் அஜிஸ் கருத்து

சிஎஸ்கே அணி முழுக்க முழுக்க வெளிநாட்டு வீரர்களைத்தான் அதிகமாக நம்புகிறது அவர்களுக்குத்தான் அதிக வாய்ப்பும் (முக்கியத்துவம்) அளிக்கிறது. 8வது ஐபிஎல்லில் சிஎஸ்கே இது வரையில் 17 போட்டிகளில் பங்கு பெற்றுள்ளது.

இதில் குறிப்பிட்ட சில வீரர்களுக்கு ஆட வாய்ப்பு அளிக்கவே இல்லை என்பதுதான் வருத்தமான விஷயம். அவர்களை தேவையில்லாமல் ஏலத்தில் எடுத்து ஏமாற்றியதுதான் மிச்சம். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 9வது ஐபிஎல்லிலாவது இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

மைக்கல் ஹசி, ட்வைன் ஸ்மித், ஜடேஜா, நேகி, போன்றவர்களை நீக்கிவிட்டு கிரிக்கெட்டில் நல்ல பார்மில் உள்ள மாற்று வெளிநாடு மற்றும் உள்நாட்டு வீரர்களை தேடிப் பிடித்து ஏலத்தில் எடுத்து சிறப்பாக ஆட வேண்டும் என்பது எனது ஆவல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x