Published : 04 May 2015 10:11 AM
Last Updated : 04 May 2015 10:11 AM

சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சிதம்பரம் நடராஜர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று தரிசன விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் கும்பாபிஷேகம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 1-ம் தேதி நடைபெற்றது. ஒரே நேரத்தில் பொன்னம்பலம், சித்சபை, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ராஜகோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது.

நேற்று அதிகாலை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமிசுந்தரி அம்பாள் சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மதியம் 2 மணி அளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்கிட, தீப்பந்தங்கள் முன்னே செல்ல அசைந்து ஆடி நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் பக்தர்களுக்கு காட்சி அளித்தபடி சித்சபைக்கு சென்றனர்.

தரிசன விழாவை முன்னிட்டு இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் சபேசன், ஜோதிகுருவாயூரப்பன் மற்றும் இலங்கையை சேர்ந்த சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் மற்றும் பலர் அன்னதானம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x