Published : 04 May 2015 06:24 PM
Last Updated : 04 May 2015 06:24 PM

பேசும் படம்: வீடுசேர்ந்த உடல்கள்!

ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சிப் படையினருக்கும் உக்ரைன் ராணுவத்துக்கும் இடையே கடந்த ஆண்டு நடந்துவந்த சண்டைக்கு நடுவே, நெதர்லாந்திலிருந்து மலேசியாவுக்குச் சென்றுகொண்டிருந்த மலேசிய விமானம் எம்.ஹெச்.-17 கிழக்கு உக்ரைன் பகுதிக்கு மேலே பறந்துசென்றபோது சுட்டு வீழ்த்தப்பட்டது.

கிளர்ச்சிப் படையினர்தான் விமானத்தைச் சுட்டுவீழ்த்தியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. விமானத்தில் இருந்த 298 பேரில் யாரும் உயிருடன் மிஞ்சவில்லை. உயிரிழந்த நெதர்லாந்து பயணிகள் 7 பேரின் எஞ்சிய உடல் பாகங்களைச் சுமந்துகொண்டு, அந்நாட்டின் ஐந்தோவன் விமான நிலையத்துக்கு சனிக்கிழமை வந்து சேர்ந்த விமானத்தின் முன் நிற்கிறார் நெதர்லாந்து விமானப்படை அதிகாரி.

படம்: ஏ.எஃப்.பி.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x