Published : 05 May 2015 02:43 PM
Last Updated : 05 May 2015 02:43 PM

பணிமாறுதலுக்கு தற்கொலையா?- செம்பியன்

செய்தி:>உயரதிகாரியின் நெருக்கடி காரணமா? - திருவாரூரில் அரசு அலுவலர் தீக்குளித்து தற்கொலை: ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் மீது வழக்குப் பதிவு

'தி இந்து' ஆன்லைன் வாசகர் செம்பியன் கருத்து:

வேலை செய், லஞ்சம் வாங்காதே என்று சொன்னால், அரசு ஊழியருக்கு மன உளைச்சல் வரும். தற்கொலை செய்துகொள்வார்- இந்த நாடு எங்கே உருப்படும்?? அதிகாரி மேல் நடவடிக்கை எடுத்தால் எந்த அதிகாரியும் வேலை வாங்கமாட்டார்..

இந்த ஊழியர்கள் மிரட்டி/மிரட்டியே, எந்த வேலையும் செய்யாமல், கந்துவட்டி, ரியல் எஸ்டேட் போன்றவைகளை செய்துகொண்டு, அரசு சம்பளம்/பென்ஷன் போன்றவற்றை வாங்கிக்கொண்டு இருப்பார்கள். மிக தவறான முன்னுதாரணம். திருவாரூரிலிருந்து 20கி.மீ. தூரத்தில் நன்னிலத்துக்கு தானே மாறுதல், கன்னியாகுமரிக்கு அல்லவே?

இவர்களையெல்லாம், சொந்த மாவட்டத்திலிருந்து குறைந்தது 400கி.மீக்கு அப்பால், சுமார் 20 வருடங்களாவது வேலை செய்ய சொல்லவேண்டும். சொந்த ஊர் பணி, சாதிசங்க ஈடுபாட்டை/கந்துவட்டி தொழில் செய்வதை ஊக்குவிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x