Published : 06 May 2015 06:10 PM
Last Updated : 06 May 2015 06:10 PM

அள்ளி கொடுக்கறவங்க கிள்ளி கொடுக்கறதில்லே: ஷிவா

செய்தி:>வறுமையில் சிக்கி குடும்பமே பலி: உடல்களை அடக்கம் செய்யவும் ஆளில்லாத பரிதாபம்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் ஷிவா கருத்து:

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்னு சொல்லுறதெல்லாம் சும்மா வாய் வார்த்தை தான். ஐயோ பாவம் ஒரு குடும்பமே பசியால் செத்து மடிந்துள்ளனர். மனம் வேதனையா இருக்கு. எவ்வளவோ இலவசமா தராங்க நம்ம ஊருலே,

இந்த மாற்றி ரொம்ப கஷ்ட படுற மக்களுக்காகவும் ஏதாவது ஒரு அமைப்பு கொண்டுவரலாம்ல. ஒரு அரசு மருத்துவமனைல சாப்பாடு கிடைகாமே ஒரு உயிர் போயிருக்கு.. பிச்சை எடுத்து சாப்பிட கூடாதுன்னு வைரக்கியத்துல ஒரு குடும்பமே ஒண்ணுமில்லாம போயிருச்சு. தயவு செய்து இந்த மாதிரியான இழப்புகள் இனியும் வேண்டாம். பெரிய பெரிய டிரஸ்ட் க்கு கோடி கோடியா அள்ளி கொடுக்குறே பணக்காரர்கள் ஏன் ஏழை எளியவங்களுக்கு கிள்ளி கொடுக்கறதில்லே...

பணம் கொடுத்து உதவ வேணாம். அவர்களுக்கு எதாவது ஒரு வேலை போட்டு கொடுத்தால் போதும் அவர்களும் மூன்று வேலையும் சாப்பிடுவார்கள். அனைத்து அரசியல்வாதிகளும் வேஸ்ட். இந்த அரசும் வேஸ்ட். குறிப்பாக தமிழ்நாடு அரசும், அரசியல்வாதிகளும் மகா மோசம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x