Published : 28 May 2015 06:53 PM
Last Updated : 28 May 2015 06:53 PM

விமானநிலையப் பிரச்சனைகளை கவனியுங்கள்: தமிழினியன்

செய்தி:>சென்னை விமான நிலையத்தில்! கட்டணம் வசூலிப்பதற்காக திட்டமிட்டு குறுகிய சாலை அமைப்பு: உங்கள் குரலில் வாசகர் புகார்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் தமிழினியன் கருத்து:

ஊழலின் பிறப்பிடம் சென்னை விமான நிலையத்தில் நடைபெறும் சாலை மற்றும் பார்க்கிங் வசூல். மக்களுக்கு சேவை செய்யத்தான் வந்துள்ளோம் என்பதை மறந்து, முக்கிய பிரமுகர், விஐபி, சாதாரண மக்கள் என தரம் பிரிப்பது தவறானது.

நமது இந்தியாவில் மட்டும்தான் இப்படியெல்லாம் அதிகம் உள்ளது. இது மாறணும், இல்லை மக்கள் மாற்றத்தை ஏற்படுத்தணும். இல்லாவிட்டால் மக்களை கேவலமாக நடத்துவது எப்படி நிற்கும். ஒரு பக்கம் ஏர்போர்ட் கூரை விழுது. மறுபக்கம் இப்படி வசூல் கொள்ளை. மக்கள் மாறும் நாட்கள் வந்தால், மீண்டும் ஒரு டெல்லி தமிழகத்தில் ஆட்சியாகும்.

பொதுவாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் பற்றி எந்த தமிழக அரசியல் கட்சிகளும் கவலைப்படுவதும் இல்லை. விமான நிலையக் கூரை 42 தடவை விழுந்தும், இரண்டு திராவிடக் கட்சிக்காரர்களும் மத்திய அரசை கேள்வி கேட்கலை. தமிழர் வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் மட்டுமே இதுவரை குரல் கொடுத்துள்ளார்.

மற்ற அனைத்து தேசிய, மற்றும் மாநிலக் கட்சிகள் யாரும் கண்டு கொள்வதும் இல்லை கேட்பதும் இல்லை, அந்நிய செலவாணி மற்றும் போதும், திமுக தலைவரோ அல்லது அவர் கட்சி தளபதியோ இதைப் பற்றி கவலயே படுவதில்லை இப்படி எல்லா கட்சிகளும் உள்ளபோது, மக்கள் நலன் பற்றி வேறு யார் கவலைப் படுவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x