Published : 05 May 2015 02:34 PM
Last Updated : 05 May 2015 02:34 PM

படிக்கவைக்க பைசா செலவில்லை: தென்மொழி

சிறப்புக் கட்டுரை:> நம் கல்வி... நம் உரிமை!- தப்பித்த குரங்குகள்!

தி இந்து ஆன்லைன் வாசகர் தென்மொழி கருத்து:

சூலூர் அரசு தொடக்கப் பள்ளியின் பள்ளியின், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் கடந்த மூன்று ஆண்டுகளாக இயன்ற அளவு செயல்பட்டு, பள்ளியின் மேம்பாட்டு நடவடிக்கைகளில் பெற்றோர்கள் பலரை ஒருங்கிணைத்து செயலாற்றி வருகிறோம்.

என் கணவர் தமிழ் நாடு மின்சார வாரியத்தில் உதவி செயற் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். தனியார் பள்ளியின் போதையில் வீழ்ந்து விடாமல், எங்கள் மகன் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில், ஒன்றாம் வகுப்பில் சேர்த்தது முதல் இன்று அய்ந்தாம் வகுப்புக்கு அடியெடுத்து வைப்பது வரை கண்டு உணர்ந்து மனநிறைவு கொள்கிறோம்.

இது வரை எங்கள் மகனின் கல்விக்கென, ஒரு பைசா கூட செலவு செய்ததில்லை. தனியார் பள்ளிகளின் ஏமாற்று வித்தைகளில் எங்களுக்கு உடன்பாடில்லை. பெற்றோர்களுக்கு விழிப்புணர்வூட்டும் தமிழ் இந்து வாழ்க

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x