Published : 08 Apr 2015 06:38 PM
Last Updated : 08 Apr 2015 06:38 PM

பகை... பெரும் பாதிப்பை உருவாக்கும்: விக்ரம்

செய்தி:>சென்னை கோயம்பேட்டில் கல்வீச்சு: ஆந்திர பேருந்துகள் சேதம்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் விக்ரம் கருத்து:

இவையனைத்தும் தேவையில்லாதது. சில அரசியல்வாதிகள் தங்களின் சுயநலனுக்காக பிரச்சனையை பெரிதாக்குகின்றனர். மக்களின் உணர்வுகளுடன் விளையாடுகின்றனர்.

சுட்டுக் கொன்றது ஒரு வகையில் அத்துமீறிய செயல்தான் என்றாலும், அதற்காக எல்லா தெலுங்கு மக்களையும் எல்லாம் ஆந்திரா அலுவலகங்களின் மீதும் தாக்குதல் நடத்துவது நமக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எத்தனையோ ஆந்திராவை சேர்ந்த மக்கள் நம் தமிழக அரசின் அலட்சியத்தால் கடந்த காலங்களில் உயிரிழந்துள்ளனர்.

மிக சிறந்த உதாரணம் - போரூர் கட்டிட விபத்து. மக்களே விழித்து கொள்ளுங்கள். ஒரு சிலர் செய்யும் தவறுக்காக அனைவரையும் பகைப்பது நமக்கு மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x