Published : 01 Apr 2015 02:24 PM
Last Updated : 01 Apr 2015 02:24 PM

விஜயகாந்த் செய்வது மட்டும் நியாயமா?- ராம்

செய்தி:>விஜயகாந்த் விமர்சனம் எத்தகையது?

'தி இந்து' ஆன்லைன் வாசகர் ராம் கருத்து:

இவர் சொல்வது நியாயம்தான். ஆனால் இவர் செய்வது மட்டும் நியாயமா? எதிர்க்கட்சி தலைவர் என்கின்ற முறையிலும், சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும், இவரை தேர்ந்து எடுத்த மக்களுக்கு இவர் ஆற்றிய ஜனநாயக கடமைதான் என்ன?

சட்டசபை வளாகத்தில் சென்று கையெழுத்திட்டு திரும்புவது ஏற்புடையதா? வெற்று அறிக்கைகள் மட்டுமே மக்களுக்கு செய்யும் சேவையாகாது.

தமிழகத்தில் கை விட்டு எண்ணக் கூடிய கட்சிகளில் ஒன்றாக திகழ்ந்துகொண்டு சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களுக்கு மட்டும்தான் வெளியே வருவேன், மற்ற சமயங்களில் முடங்கியிருப்பேன் என்பது எந்த நியாயத்தில் சேர்த்தி?

அன்றாடம் மக்கள் சந்திக்கும் ஆயிரம் பிரச்சினைகளை முன்னெடுத்து தெருவில் இறங்கி போராடத்தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்துள்ளார்கள். வெத்து அறிக்கை அரசியல் நீடிக்காது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x