Published : 08 Apr 2015 03:17 PM
Last Updated : 08 Apr 2015 03:17 PM

அடிவாங்குவோர் பட்டியலில் இனி தமிழர்கள்: குபேந்திரன்

செய்தி:>என்கவுன்ட்டர் நடத்துவோம் என ஆந்திர போலீஸார் எச்சரித்தும் பயனில்லை

'தி இந்து' ஆன்லைன் வாசகர் குபேந்திரன் கருத்து

இந்தியாவைப் பொறுத்தவரை சமூகத்தின் சில பிரிவினர் தொடர்ந்து அடி வாங்கியபடியே உள்ளனர். இதை யாருமே மறுக்க மாட்டார்கள்.

ஏழைகள், தலித் மக்கள், ஆதிவாசிகள், முஸ்லிம்கள். இது இந்தியாவின் வட கோடி முதல் தென் கோடி வரை நிரூபணமாகியபடியே உள்ளது.

இந்தப் பிரிவினர் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான அடக்குமுறைகளைச் சந்தித்தபடியேதான் உள்ளனர். தலித் மக்கள் சந்திக்காத அடக்குமுறையே இல்லை. ஆதிவாசிகளின் நிலையைச் சொல்ல வேண்டாம்.

முஸ்லிம்கள் சந்திக்கும் சவால்களை புத்தகம் புத்தகமாக எழுதலாம். இந்த வரிசையில் தற்போது தமிழர்களையும் சேர்த்துவிட்டார்கள் போலத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x