Published : 07 Apr 2015 12:28 PM
Last Updated : 07 Apr 2015 12:28 PM

மாட்டிக்கொள்வது அப்பாவி தமிழர்களே: செம்பியன்

செய்தி:>செம்மரக் கடத்தல் விவகாரம்: ஆந்திராவில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் தமிழக தொழிலாளர்கள் உட்பட 20 பேர் பலி

'தி இந்து' ஆன்லைன் வாசகர் செம்பியன் கருத்து:

மரம் வெட்டுவதற்கு காண்ட்ராக்ட் பேசி அழைத்து செல்லும் தெலுங்கர்கள், எந்த மாதிரி மரம் வெட்டப்போகிறோம் என்று சொல்வது கிடையாது. உரிமம் பெற்ற இடங்கள் என்று சொல்லித்தான் மரம் வெட்டுவதில் ஈடுபடுத்துகிறார்கள்.

காடுகளில் உரிமம் பெற்ற இடம், பெறாத இடம் என்று வகைப்படுத்துவது வனவர்கள், ரேஞ்சர்களுக்குத்தான் நன்கு தெரியும். ஆனால் வரையறுக்கப்பட்ட இடங்களை காண்பிக்காமல், லோக்கல் ஆட்கள், கடத்தல்காரர்களுடன் கூட்டு சேர்ந்து, கணக்கு காண்பிக்க அல்லது மாட்டிக்கொள்ளும்போது இந்த அப்பாவிகளை சுட்டுக் கொல்கிறார்கள்.

மரக்கடத்தல்காரர்களும், அவர்களது புரோக்கர்களுமே குற்றவாளிகள். இந்த புரோக்கர்களது நடமாட்டம் தமிழகத்துக்குள் கண்காணிக்கப்பட வேண்டும். [ஆனால் இந்த செம்மரங்கள், சென்னை துறைமுகம் வழியாக போலி ஆவணங்கள் மூலம் கடத்தப்படும்போது பிடிபடுவதே இல்லை.]

தமிழனை உபயோகித்து கடத்தி பலன் பெறுவது தெலுங்கர். ஆனால் சாவது மட்டும் தமிழன். மிகப் பெரும் சட்டவிரோத கூட்டணி இதில் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x