Published : 03 Apr 2015 02:39 PM
Last Updated : 03 Apr 2015 02:39 PM

ஐ.எஸ். ஒரு முஸ்லிம் அமைப்பா?- சையது சாம்

செய்தி:>இந்திய முஸ்லிம் இளைஞர்களை ஐ.எஸ். வசப்படுத்த முடியாது: யு.எஸ். நிபுணர்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் சையது சாம் கருத்து:

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு எதற்காக உருவானது, அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது ஐஎஸ்ஐஎஸ் செய்து வரும் செயல்களால் நீரூபணம் ஆகிக் கொண்டே தான் இருக்கின்றது.

ஐஎஸ்ஐஎஸ் ஒரு முஸ்லிம் அமைப்பாக இருந்தால் கடந்த மாதம் ஒரு வெள்ளிக்கிழமை இறைவனை வழிப்பட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது ஏன் குண்டு வீசிக் கொல்ல வேண்டும்?

தீவிரவாத செயல்களில் வெறும் முஸ்லிம்கள் மட்டுமே ஈடுபடுவதாக புனையப்படும் கற்பனைகளில் இதுவும் ஒன்று தான். தவறு இஸ்லாமியன் செய்தால் செய்தி நாளேடுகள் முதல் பக்கத்தில் போட்டு பிரசுரிக்கிறது. இதே வேறு நம்பிக்கை உள்ள ஒருவன் செய்தால் பெட்டி செய்தியாகிவிடுகிறது.

இப்படித்தான் முஸ்லிம்கள் தீவிரவாதியாக இன்றளவும் சித்தரிக்கப்பட்டு சிறையில் சித்ரவதை அனுபவிக்கின்றனர்.

நன்மையும் தீமையும் நாம் பார்க்கும் பார்வையில் தான் உள்ளதே தவிர மற்றவர்களிடம் இல்லை என்பதை எப்போது நாம் உணரப்போகிறோம்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x