Last Updated : 24 Mar, 2015 10:19 AM

 

Published : 24 Mar 2015 10:19 AM
Last Updated : 24 Mar 2015 10:19 AM

எல்லைப் பிரச்சினை: இந்தியா - சீனா பேச்சுவார்த்தை

எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா – சீனா இடையே 18-வது சுற்று பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு பதவியேற்ற பின் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.

இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் எல்லை விவகாரங்களுக்கான சிறப்பு பிரதிநிதியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான அஜித் தோவலும் சீனா சார்பில் அந்நாட்டின் தேசியபோது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவில் பயணம் மேற்கொண்ட 6 மாதங்களுக்குப் பிறகு இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஜின்பிங் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா வரும்வேளையில், லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவியது. ஜின்பிங் பயணத்துக்கு பிறகு இரு நாட்டு ராணுவமும் தங்கள் வீரர்களை அங்கிருந்து விலக்கிக்கொண்டன. பிரதமர் நரேந்திர மோடி வரும் மே மாத இறுதியில் சீனா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

பிரதமர் பயணத்துக்கு ஏற்பாடுகளை செய்வதற்கு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடந்த மாதம் சீனா சென்றார். எல்லைப் பிரச்சினையை எதிர்கால சந்ததியினரிடம் விடுவதை தவிர்த்து விரைவான தீர்வு காணப்படுவதை அவர் வலியுறுத்தினார்.

2 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு எல்லைப் பிரச்சினை இருப்பதாகவும் இதில் பெரும்பகுதி அருணாசலப்பிரதேசத்துக்கு உட்பட்டது எனவும் சீனா கூறுகிறது. 1962-ல் சீனாவில் ஆக்கிரமிக்கப்பட்ட அக்சாய் சின் பகுதி உட்பட 4 ஆயிரம் கி.மீ. தொலைவு மேற்கு எல்லையும் பிரச்சினைக்கு உட்பட்டதாக இந்தியா கூறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x