Published : 17 Mar 2015 06:59 PM
Last Updated : 17 Mar 2015 06:59 PM

பாஜக பேச்சாளர்களுக்கு ஒரு கேள்வி - துரைராஜ்

செய்தி:>என் இதயம் நொறுங்கிவிட்டது; அவர்களை மன்னித்துவிடுங்கள்: பாதிக்கப்பட்ட மேற்கு வங்க கன்னியாஸ்திரி பிரார்த்தனை

'தி இந்து' ஆன்லைன் வாசகர் துரைராஜ் கருத்து:

72 வயது பெண்மணிக்கே இந்த கதி எனும்போது பாதிக்கப்பட்டவர், அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவது மிகவும் நியாயமானது ஆகும்.

இந்தியா என்றாலே பாம்பு நாடு என்ற அபிப்பிராயம் உலக நாடுகளுக்கு சிறிது ஆண்டுக்கு முன்பு வரை இருந்தது. அதையெல்லாம் மாற்றி செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விடுவது வரை முன்னேறினோம். இப்போது இந்தியா என்றாலே பலாத்கார நாடு என்ற பெயர் வந்து விடும் போல் தெரிகிறது.

வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வரும் பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்வதால் பல நாடுகள் தங்கள் மக்களை இந்தியாவுக்கு செல்லும்போது கவனத்துடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது. இது அசிங்கம் அல்லவா?

வறுமையில் இருக்கும் நாட்டில்கூட இதுபோன்று நடக்கவில்லை. எந்த அடிப்படையில் இந்தியா பாதுகாப்பு சபையிலும் சரி, ஐ.நா.விலும் நிரந்தர அந்தஸ்து கேட்க முடியும்? ஏன் பக்கத்துக்கு நாடுகளில் நடக்கும் பாலியல் தவறுகளை தட்டிக் கேட்பதற்கு உரிமை உள்ளதா?

ஓர் ஆவணப் படத்தை மறைத்து இந்தியாவின் மானத்தை காப்பாற்றிவிடலாம். எல்லா நாளும் இது சாத்தியமாகுமா என்பதை டிவியில் விவாதிக்கும் பிஜேபியின் பேச்சாளர்கள்தான் சொல்ல வேண்டும்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x