Published : 18 Mar 2015 04:00 PM
Last Updated : 18 Mar 2015 04:00 PM

கருப்பு பணமும் ஏழை மக்களும்: சாயில்ஸ் அகமது

செய்திக் கட்டுரை:>கருப்பு பணத்தை ஒழிக்க மக்களின் கழுத்தை நெரிக்கும் அரசு

'தி இந்து' ஆன்லைன் வாசகர் சாயில்ஸ் அகமது கருத்து:

ஏழைகளுக்கு ஒரு சொத்து வீடு மனை வாங்குவது என்பதே அவர்களது வாழ்நாளின் கனவாக உள்ள நிலையில், தட்டுத் தடுமாறி எப்படியோ கஷ்டப்பட்டு கொஞ்சம் காசுகளை சேர்த்துக்கொண்டு சொத்து வாங்க முற்படுபோது, இன்றைய ஆட்சியாளர்களால் போடப்பட்டுள்ள கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவது இவர்களாகத்தான் இருப்பார்கள்.

கோடிகளில் சொத்து வாங்குபவர்களிடத்தில் கருப்பு பணம் புழக்கம் என்பது இருக்கலாம். அன்றாடம் காய்ச்சி ஏழைகளிடத்தில் கருப்பு பணம் புழக்கம் என்பது வினாவுக்குரியது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.

சொத்து வாங்கும்போது பான் எண் என்பதோ, வங்கிக் காசோலைகளில் பரிமாற்றம் என்பதோ தேவையற்ற சிரமங்களை ஏழைகளுக்கு தருவதுடன், பொதுவாக நிலங்கள் விற்பனைகளில் ஒருவித தேக்க நிலைகள் உருவாகிவிடும்.

எனவே, சொத்துகள் விற்பனையால் வரக்கூடிய வருமான இழப்புகளும் அரசுக்கு பாதிப்பை உண்டாக்குவது நிச்சியமாகும்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x