Published : 12 Apr 2014 11:59 AM
Last Updated : 12 Apr 2014 11:59 AM

ஐடிஎப்: இறுதிச்சுற்றில் பிரார்த்தனா

சென்னையில் நடைபெற்று வரும் ஐடிஎப் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பிரார்த்தனா தோம்பரே, எட்டீ மஹேத்தா ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் பிரார்த்தனா 6-3, 7-5 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான நிதி சிலுமுலாவையும், எட்டீ மஹேத்தா 3-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் நடாஷா பல்ஹாவையும் தோற்கடித்தனர்.

இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் சர்மதா பாலு-ரிஷிகா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஜோடி 6-0, 7-6 (4) என்ற நேர் செட்களில் சகநாட்டு ஜோடியான நடாஷா-பிரார்த்தனா ஜோடியைத் தோற்கடித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x