Published : 25 Sep 2014 10:59 AM
Last Updated : 25 Sep 2014 10:59 AM

இன்று முதல் வண்ண வாக்காளர் அட்டை விநியோகம்

சென்னையில் வண்ண வாக்காளர் அட்டைகள் இன்று (செப். 25) முதல் விநியோகம் செய்யப்படுகின்றன.

சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்ட சுமார் 14 லட்சம் வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. வாக்காளர் அட்டை மோசடியை தவிர்க்க புதிய அட்டையில் வாக்கா ளர்களின் தகவல்களைக் கொண்ட பட்டை குறியீடு இருக்கிறது.

மாநிலத்தில் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த வாரம் வண்ண வாக்காளர் அட்டை வழங்கும் பணி தொடங் கியது. தற்போது சென்னை மாநக

ராட்சியில் உள்ள புதிய வாக்காளர் களுக்கு வண்ண அட்டைகள் வழங்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x