Published : 13 Dec 2014 11:25 AM
Last Updated : 13 Dec 2014 11:25 AM

ஏழைகளுக்கு நிம்மதி

நாட்டில் நடக்கும் எல்லாவிதத் திருட்டுகளுக்கும் தண்டனை கொடுக்கும் நமது அரசாங்கம், காலம் காலமாக மிகவும் அநியாயமாக நடந்துகொண்டிருக்கும் ஒரு திருட்டை மட்டும் ஏன் கண்டுகொள்வதில்லை? அதாவது, மின்சாரத்தை அரசாங்கத்திடமே வாங்கி, வீ்ட்டு வாடகைதாரர்களிடம் யூனிட்டுக்கு ரூபாய் 7, 8, 9 என்று விற்கும் அநியாயத்தைத் தடுக்க அரசாங்கம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏனென்றால், இது வலியவர்களிடம் அல்ல; மிகவும் ஏழ்மையில் உள்ளவர்களிடம் சுரண்டப்படுகிறது. மின் கட்டணம் 750 முதல் 1,000 வரை வசூலிக்கப்படு கிறது. அரசாங்கம் வாடகை, மின் மீட்டர் கட்டணத்தைக் கட்டுப்படுத்தினால் ஏழை மக்களுக்கு நிம்மதி.

- வி. ஜேக்கப் ஷிலோ,‘தி இந்து’ இணையதளம் வழியாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x