Published : 15 May 2023 06:25 AM
Last Updated : 15 May 2023 06:25 AM
தமிழ்நாடு அரசு, ஒருமுறை பயன்படுத்தப்படும் ஞெகிழிப் பைகளுக்குச் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் -1986இன்படி 2018இல் தடைவிதித்து அரசாணை வெளியிட்டது. இந்தத் தடை 2019 ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது. ஞெகிழிப்பைகளுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு விழிப்புணர்வுப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டுவருகிறது. ஆனால், ஞெகிழிப் பைகளின் பயன்பாட்டை ஒழிக்கும் செயல் இன்னும் முழுமை பெறாதது ஏமாற்றம்அளிக்கிறது.
2023 பிப்ரவரியில் சென்னை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலை, தியாகராய நகர் உள்ளிட்ட சில வணிகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 2,545 கிலோ ஞெகிழிப் பைகள் பறிமுதல்செய்யப்பட்டன. அதே மாதத்தில், செங்கல்பட்டு பஜார் தெருவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஏறத்தாழ 1,000 கிலோ அளவிலான ஞெகிழிப் பைகள் பறிமுதல்செய்யப்பட்டன. ஞெகிழிப் பயன்பாடு பரவலாக நடைமுறையில் இருப்பதற்கு இந்த இரு சம்பவங்களும் தெளிவான சான்றுகள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment