Published : 04 Apr 2023 06:40 AM
Last Updated : 04 Apr 2023 06:40 AM
‘அரிய நோய்களுக்கான தேசியக் கொள்கை’யில் பட்டியலிடப்பட்டிருக்கும் அனைத்து அரிய வகை நோய்களுக்குமான மருந்துகளை இறக்குமதி செய்ய, முழு வரிவிலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. சிறப்பு மருத்துவத்துக்குத் தேவைப்படும் உணவு வகைகளுக்கும் இந்த வரிவிலக்கு பொருந்தும். கூடவே, பல்வேறு புற்றுநோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பெம்ப்ரோலிஸுமாப் (கீய்ட்ரூடா) மருந்துக்கான அடிப்படைச் சுங்க வரியையும் அரசு ரத்துசெய்திருக்கிறது.
வெளிநாடுகளிலிருந்து இந்த மருந்துகளை இறக்குமதி செய்யும் தனிநபர்களுக்குப் பலனளிக்கும் முக்கியமான நடவடிக்கை இது. மத்திய அல்லது மாநில சுகாதாரத் துறை இயக்குநர் அல்லது மாவட்ட மருத்துவ அதிகாரி / மாவட்ட பொது அறுவைசிகிச்சை மருத்துவரிடம் சான்றிதழ் பெற்றுக்கொண்டால், இந்த வரிவிலக்கைத் தனிநபர்கள் பெற முடியும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT