Published : 13 May 2022 06:19 AM
Last Updated : 13 May 2022 06:19 AM
இலங்கைப் பிரதமரைப் பதவியிலிருந்து விலகச்செய்த மக்களின் எழுச்சிப் போராட்டம், தற்போது வன்முறையின் போக்கில் திசைமாறியிருக்கிறது. விலைவாசி உயர்வு, நாணய மதிப்பின் வீழ்ச்சி, அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு என்று கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவிப்பதற்கு, ராஜபக்ச சகோதரர்களின் தவறான நிர்வாகமே காரணம் என்ற கொதிப்பு மக்களிடம் எழுந்தது. அதன் விளைவாக, கடந்த சில வாரங்களாக நடந்துவந்த பெருந்திரளான மக்கள் போராட்டத்தில் இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து, எல்லோரும் ஒன்றிணைந்து நின்றனர்.
இந்தப் போராட்டத்துக்குக் கிடைத்த முக்கியமான வெற்றி, பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பதவிவிலகல். ஆனால், அதைத் தொடர்ந்து அங்கு நடந்துவரும் வன்முறைகளும் அதன் காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்திருப்பதும் 200-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருப்பதும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்கள் தீயிடப்பட்டிருப்பதும் இலங்கை முழுவதும் கட்டுப்பாடில்லாத ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே, கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, அதிலிருந்து மீண்டெழ வேண்டுமெனில், நல்லெண்ண அடிப்படையில் அதற்கு உதவ முன்வரும் நாடுகளுடன் அயலுறவுப் பேச்சுவார்த்தைகளை நடத்த நிலையான ஓர் அரசும் அமைதியான சூழலும் அவசியம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT