Published : 11 Dec 2024 06:27 AM
Last Updated : 11 Dec 2024 06:27 AM
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான அச்சுறுத்தல்கள் அதிகரித்திருக்கும் சூழலில், இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி அந்நாட்டுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது சற்றே நம்பிக்கை அளிக்கிறது. அதேவேளையில், இரட்டை வேடம் போடும் வங்கதேசத்தைக் கூடுதல் கவனத்துடன் அணுகுவது அவசியமாகிறது. வங்கதேச விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என வெளியான அறிவிப்புக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் கவிழ்ந்தது.
அவர் இந்தியாவில் தஞ்சமடைந்த நிலையில், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது. புதிய ஆட்சியில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது கவலை அளிக்கிறது. இஸ்கான் அமைப்பின் தலைவர் சின்மயி கிருஷ்ண தாஸ் கைதுசெய்யப்பட்டது, சிட்டகாங் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள், இந்து மத வழிபாட்டிடங்கள் மீதான தாக்குதல்கள் போன்றவை இந்தக் கவலையை அதிகரித்திருக்கின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment