Published : 09 Dec 2024 06:24 AM
Last Updated : 09 Dec 2024 06:24 AM
ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட அதிகனமழையால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் போன்ற மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர்ச்சேதமும், நெல் சேமிப்புக் கிடங்குகளில் ஏற்பட்டுள்ள இழப்பும் வேதனை அளிக்கின்றன. விரைவில் அறுவடை செய்யப்பட வேண்டிய நிலையில் இருந்த பயிர்கள் நீரில் அழுக நேர்வது விவசாயிகளின் நெஞ்சை அறுக்கும் துயரம் எனில், சேமித்துவைக்கப்பட்ட தானியங்களும் வீணாகியிருப்பது வார்த்தைகளில் விவரிக்க முடியாத இழப்பாகும்.
விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 80,520 ஹெக்டேர் பரப்பளவுக்குப் பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக முதல் கட்டமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள 32 அரவை ஆலைகளில் 17 ஆலைகள் பாதிப்பைச் சந்தித்திருக்கின்றன. விக்கிரவாண்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த தானிய மூட்டைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment