Published : 04 Dec 2024 06:23 AM
Last Updated : 04 Dec 2024 06:23 AM
லெபனானில் இருந்து இயங்கிவரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது, மத்தியக் கிழக்கில் நீடித்துவரும் பதற்றத்தின் ஒரு பகுதியைத் தற்காலிகமாகக் குறைத்திருக்கிறது. அதேவேளையில், இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கு இலக்காகிவரும் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படுவது எப்போது என்னும் கேள்வியும் நீடிக்கிறது.
2023 அக்டோபர் 7இல் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, கடந்த 14 மாதங்களாக காஸா மீது கடும் தாக்குதல் நடத்திவருகிறது இஸ்ரேல். இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 44,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். ஹமாஸுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவருகின்ற - லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதால், பதிலடியாக லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...