Published : 26 Nov 2024 06:15 AM
Last Updated : 26 Nov 2024 06:15 AM
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75ஆவது ஆண்டுக் கொண்டாட்டத்தில் நாம் இருக்கிறோம். டாக்டர் அம்பேத்கர் தலைமையில் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணி நடந்துவந்த நிலையில், 1949 நவம்பர் 26 அன்று, அரசமைப்புச் சட்டத்தின் இறுதி வடிவத்துக்கு அரசமைப்புச் சட்ட நிர்ணய அவை முழு ஒப்புதல் அளித்தது. இந்த 75 ஆண்டுகளில் இந்திய ஜனநாயகம் நிகழ்த்திக் காட்டியிருக்கும் சாதனைகள் அளவில்லாதவை.
தேச விடுதலைக்கு முன்பே அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. தேச விடுதலைக்காகப் போராடியவர்களே, அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்தனர் என்பதால், இந்தியாவின் ஜனநாயகத்தன்மையைக் காக்கும் வகையில் அதை வலிமையாகக் கட்டமைத்தனர். தேர்தலில் வாக்களிப்பவர்கள், இந்தியக் குடிமக்களாக இருக்க வேண்டும் என்பதைத் தாண்டி, வேறு எந்த நிபந்தனையையும் விதிக்காத நாடு இந்தியா.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment