Published : 22 Nov 2024 06:31 AM
Last Updated : 22 Nov 2024 06:31 AM

ப்ரீமியம்
மருத்துவமனை தீ விபத்து: அலட்சியத்தால் விளையும் ஆபத்து

உத்தரப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்திருப்பது வேதனைக்குரியது. கடந்த மே மாதம் டெல்லி தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் ஏழு குழந்தைகள் உயிரிழந்தன. மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட உயிரிழப்புகள் நிகழ்வது மருத்துவமனைகளின் பராமரிப்பிலும் நோயாளிகள் பாதுகாப்பிலும் நிலவும் போதாமைகளை முகத்தில் அறைந்து சொல்கிறது.

உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரியின் அங்கமான மருத்துவமனைக்கு நாள்தோறும் சுமார் 5,000 பேர்வரை சிகிச்சைக்கு வந்துசெல்வதாகக் கூறப்படுகிறது. கடந்த நவம்பர் 15 அன்று இந்த மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தினால் இதுவரை 12 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x