Published : 18 Nov 2024 06:27 AM
Last Updated : 18 Nov 2024 06:27 AM
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான ஆலோசனைக் குழுக்களை அமைக்க வேண்டும் என்று தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தூத்துக்குடி மாவட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளுக்காக மாணவிகளை வெளியூருக்கு அழைத்துச் சென்ற இடத்தில், அவர்களை மது அருந்த வற்புறுத்தியதாகவும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் தனியார் பள்ளியைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் குற்றம்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. பயிற்சியாளர் ஒருவர் தனியார் பள்ளி மாணவிகளை என்.சி.சி. முகாமுக்கு அழைத்துச் சென்று, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கைதுசெய்யப்பட்டார். மாணவிகளின் புகாரைப் பெற்ற சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகங்கள் அதனை மூடி மறைக்க முயன்றது, இவ்விரு சம்பவங்களுக்கு இடையிலான பொதுவான அம்சம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment