Published : 30 Sep 2024 06:27 AM
Last Updated : 30 Sep 2024 06:27 AM

ப்ரீமியம்
தெரு நாய் பிரச்சினைக்குத் தீர்வு எப்போது?

தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் நாய்க்கடிப் பிரச்சினை கவலை அளிக்கிறது. தெரு நாய்களின் இயல்புக்கு மீறிய இனப்பெருக்கம் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தலைநகர் சென்னையும் இந்தப் பிரச்சினையிலிருந்து தப்பிவிடவில்லை. சென்னை மாநகராட்சியில் தெரு நாய்களின் எண்ணிக்கை குறித்து உலகளாவிய கால்நடை சேவை என்கிற தன்னார்வ அமைப்பு நடத்தியிருக்கும் கணக்கெடுப்பின் முடிவுகள், தெரு நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த உடனடியாகவும் தீவிரமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.

சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும், இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2021இல் 57,366 ஆக இருந்த நாய்களின் எண்ணிக்கை, 2024 இல் 1,80,000 ஆக அதிகரித்துள்ள விவரம் இதில் தெரியவந்துள்ளது. தவிர, சென்னையில் 27 சதவீத நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளது. நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தக் கருத்தடை முக்கியமான வழிமுறையாகப் பரிந்துரைக்கப்படும் நிலையில், அந்த நடவடிக்கையில் சென்னை இவ்வளவு பின்தங்கியிருப்பது வருத்தத்துக்கு உரியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x