Published : 01 Aug 2024 06:28 AM
Last Updated : 01 Aug 2024 06:28 AM
டெல்லியில் இயங்கிவரும் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், ஜூலை 27 அன்று மழைவெள்ளம் புகுந்ததில் மூன்று இளம் பட்டதாரிகள் நீரில் மூழ்கி இறந்திருப்பது, நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையும் இந்தச் சம்பவம் பட்டவர்த்தனமாக்கியிருக்கிறது.
டெல்லியில் உள்ள ராஜேந்திர நகர் என்னும் பகுதியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் இயங்கிவருகின்றன. இத்தேர்வுகளுக்குப் பயிற்சி அளிப்பதில் நீண்ட கால அனுபவம் கொண்ட ‘ராவ் ஐஏஎஸ் ஸ்டடி சர்க்கிள்’ என்னும் பயிற்சி மையத்தில்தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. டெல்லியில் மீண்டும் தொடங்கிய கனமழையால், ராஜேந்திர நகர் பகுதியில் உள்ள தெருக்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...