Published : 31 Jul 2024 06:30 AM
Last Updated : 31 Jul 2024 06:30 AM

ப்ரீமியம்
நாய்க்கடி இறப்புகள்: உறுதியான நடவடிக்கை அவசியம்

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி ஜூன் மாதம் வரை 2,42,000 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் 22 பேர் ரேபிஸ் நோயால் இறந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் ஆய்விதழ் தரவுகள் அதிர்ச்சியளிக்கின்றன. மனித – விலங்கு எதிர்கொள்ளலில் மிக முக்கியப் பிரச்சினை நாய்க்கடி. விலங்குகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் 95% நாய்க்கடியால் ஏற்படுவதாக இந்த ஆய்விதழ் தெரிவிக்கிறது.

தகுந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு, உரிமம் பெற்று வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களால் பெரும்பாலும் பிரச்சினை இல்லை என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், நாய்க்கடிக்கு ஆளாவோரில் 75% பேர் வீட்டு நாய்களால் பாதிக்கப்பட்டவர்கள். ரேபிஸ் தொற்றுக்கு ஆளாகி இறப்பவர்களிலும் வீட்டு நாயால் கடிபட்டவர்களே அதிகம். அதேபோல் ஆதரவின்றித் தெருவில் திரியும் நாய்களாலும் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x