Published : 10 Jul 2024 06:23 AM
Last Updated : 10 Jul 2024 06:23 AM
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகப் பச்சிளங்குழந்தைகளின் இறப்பு விகிதம் 9 ஆகக் குறைந்திருப்பது, குழந்தைகள் நலன் மீதான அரசின் அக்கறையைக் காட்டுகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி, அந்நாட்டுக் குழந்தைகளின் ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புடையது. 2020 தரவின்படி தேசியச் சராசரியைவிட (28) தமிழகத்தில் பச்சிளங்குழந்தைகள் இறப்பு விகிதம் (13) குறைவு என்பதும் தமிழகத்தில் குழந்தைகள் நலக் கொள்கைகள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுவருவதை உணர்த்துகிறது.
கேரளத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே பச்சிளங்குழந்தை இறப்பு விகிதம் 6 ஆகக் குறைந்துவிட்டது. தமிழகத்தில் பச்சிளங்குழந்தைகள் இறப்பு விகிதம் 2007 முதல் சீரான வேகத்தில் குறைந்துவந்துள்ளது. 2007இல் ஆயிரம் குழந்தைகளுக்கு 35 குழந்தைகளாக இருந்த இறப்பு விகிதம், படிப்படியாகக் குறைந்து 2017இல் 16ஆக மாறி, தற்போது 9ஆகக் குறைந்திருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment