Published : 27 Jun 2024 08:32 AM
Last Updated : 27 Jun 2024 08:32 AM

ப்ரீமியம்
மாஞ்சோலை: தொழிலாளர்களின் எதிர்காலம் காக்கப்பட வேண்டும்

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பிருந்தே தலைமுறை தலைமுறையாக மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத்தில் வாழ்ந்துவந்த தொழிலாளர்கள், குத்தகைக் காலம் முடிவடையவிருப்பதால் அங்கிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

1929இல் சிங்கம்பட்டி ஜமீனிடமிருந்து சுமார் 8,373 ஏக்கர் நிலத்தை வாடியா குழுமத்துக்குச் சொந்தமான ‘பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட்’ (பி.பி.டி.சி.எல்) நிறுவனம் 99 வருடக் குத்தகைக்கு எடுத்தது. விடுதலைக்குப் பிறகு தமிழ்நாடு இனாம் எஸ்டேட் ஒழிப்புச் சட்டம் 1948இன்படி 1952இல் சிங்கம்பட்டிக்குச் சொந்தமான மாஞ்சோலைத் தோட்டம், தமிழ்நாடு அரசின் வசமானது. ஏற்கெனவே குத்தகை ஒப்பந்தம் நிலுவையில் இருக்கும் நிலையில் 1958இல் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின்படி அந்நிறுவனம் 99 வருடத்துக்கான குத்தகையை அனுபவிக்கலாம் எனத் தீர்மானமானது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x