Published : 24 Jun 2024 08:32 AM
Last Updated : 24 Jun 2024 08:32 AM
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தச் சம்பவம் அரசு இயந்திரத்தின் தோல்வியையும் ஏற்கெனவே நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்களிலிருந்து அரசு பாடம் கற்காததையும் அலட்சியத்தையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
கருணாபுரத்தில் ஒரு துக்க நிகழ்வுக்குச் சென்ற இடத்தில் கள்ளச்சாராயத்தைக் குடித்ததில் 164 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இவர்களில் நான்கு பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த மரணங்களுக்கு, சாராயத்தில் கலந்திருந்த மெத்தனால் வேதிப்பொருளே காரணம் என்பது தெரிய வந்திருக்கிறது. கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த கோவிந்தராஜ் என்கிற கண்ணுக்குட்டி, அவருடைய மனைவி உள்பட பத்துக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பணியிட மாற்றம், காவல் கண்காணிப்பாளர் தற்காலிகப் பணி நீக்கம் என்பன போன்ற நடவடிக்கைகள் அரசுத் தரப்பில் துரிதமாக எடுக்கப்பட்டுள்ளன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment