Published : 21 Jun 2024 07:15 AM
Last Updated : 21 Jun 2024 07:15 AM

ப்ரீமியம்
சாதி மறுப்புத் திருமணங்கள்: திட்டவட்டமான சட்டப் பாதுகாப்பு வேண்டும்

திருநெல்வேலியில், சாதிமறுப்புத் திருமணம் செய்துவைத்ததால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சாதிமறுப்புத் திருமணம் செய்துகொள்பவர்கள் தாக்கப்படுவது, ஆணவப் படுகொலை செய்யப்படுவது என்பன போன்ற அவலங்கள் தொடர்ந்துவரும் நிலையில், சாதிமறுப்புத் திருமணம் செய்துகொள்வோருக்குச் சட்டப் பாதுகாப்பு அளிக்கும் அரசியல் கட்சிகள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இது தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் சாதி ஆணவப் போக்கின் அபாயத்தை உணர்த்துகிறது.

வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த மதன் குமார், உதய தாட்சாயினி ஆகிய இருவரும், எதிர்ப்புகளுக்கு மத்தியில் திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியினரின் துணையுடன் அண்மையில் திருமணம் செய்துகொண்டனர். இத்தகவலை அறிந்த உதய தாட்சாயினியின் உறவினர்கள் அங்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். இதில், அக்கட்சி அலுவலகத்தின் கண்ணாடி, நாற்காலிகள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டன. தாக்குதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் மணப்பெண்ணின் தாய், தந்தை உள்பட 13 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x