Published : 18 Jun 2024 08:53 AM
Last Updated : 18 Jun 2024 08:53 AM

ப்ரீமியம்
திருநர் வாழ்வில் ஒளியேற்றும் தீர்ப்பு

கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் திருநர்கள் சிறப்புப் பிரிவினராகக் கருதப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருப்பது வரவேற்புக்குரியது. திருநர் சமூகத்தினர் அரசு வழங்கும் கல்வி, வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் உள்ள தடைகளை நீக்குவதில் இந்தத் தீர்ப்பு பெரும் பங்களிக்கக்கூடும்.

திருநங்கை ஆர்.அனுஸ்ரீ, 2017-18இல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2ஏ தேர்வை எழுதி 121.5 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். ஆனால், அவர் பட்டியல் சாதிப் பெண்கள் என்னும் பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணைவிடக் குறைவாகப் பெற்றிருந்ததால் பணிவாய்ப்பைப் பெறுவதற்காகத் தனது சான்றிதழ்களைப் பதிவேற்ற அனுமதிக்கப்படவில்லை. இதை எதிர்த்து அனு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x