Published : 17 Jun 2024 05:52 AM
Last Updated : 17 Jun 2024 05:52 AM

ப்ரீமியம்
இந்தியத் தொழிலாளர்களின் உரிமைகளும் பாதுகாப்பும் முக்கியம்

மேற்கு ஆசிய நாடான குவைத்தில் தொழிலாளர் வசிப்பிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் உள்பட 46 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்களின் நிலை குறித்த கவலையையும் இந்தச் சம்பவம் ஏற்படுத்தியிருக்கிறது.

குவைத்தின் மங்காவ் பகுதியில் ‘கேம்ப் 4’ என்கிற 6 மாடிக் கட்டிடத்தில் 196 தொழிலாளர்கள் தங்கியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஜூன் 12ஆம் தேதி அதிகாலை 4.30 மணி அளவில், அக்கட்டிடத்தின் தரைத்தளப் பகுதியில் பாதுகாப்புக் காவலர்களின் அறையில் மின்கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட தீ, அதனருகில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்களுக்குப் பரவி விபத்து நிகழ்ந்திருக்கிறது. இந்த கோரச் சம்பவத்தில், ஒரே நேரத்தில் தப்பிக்க முயன்று நெரிசலில் சிக்கியே பலர் உயிரிழந்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x