Published : 14 Jun 2024 08:37 AM
Last Updated : 14 Jun 2024 08:37 AM

ப்ரீமியம்
சட்டத்துடன் விளையாடும் பெரிய இடத்துப் பிள்ளைகள்

குடியாட்சி என்கிற கட்டுமானத்துக்கு ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்கிற கருத்துதான் அடித்தளம். அதைப் பொருட்படுத்தாமல் ஆளுக்கு ஒரு நீதி அளிக்கப்படும் நிலையை நோக்கிச் சமூகம் நகர்த்தப்படுகிறதோ என்கிற ஐயத்தை அண்மையில் நிகழ்ந்த இரண்டு குற்ற நிகழ்வுகள் ஏற்படுத்தியுள்ளன.

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் அதிநவீன வசதிகளைக் கொண்ட கார் ஒன்று, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இளம் பொறியாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். 17 வயதுச் சிறுவன் மதுபோதையில் அந்தக் காரை ஓட்டிவந்ததாகச் செய்திகள் வெளியாகின. சிறுவனின் தந்தை, கட்டுமானத் துறையில் பெரும்புள்ளி. விசாரணையில், சிறுவனின் ரத்த மாதிரி குப்பைத்தொட்டியில் வீசப்பட்டதும் அவனுடைய ரத்த மாதிரிக்குப் பதிலாக அவனது தாயின் ரத்த மாதிரி வைக்கப்பட்டதும் தெரிய வந்தது. இந்த மோசடி தொடர்பாகச் சிறுவனும் அவனது பெற்றோரும் அதற்கு உடன்பட்ட மருத்துவர்களும் ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர். விபத்தை ஏற்படுத்தியதாகக் காவல் துறையிடம் சரண் அடையும்படி வற்புறுத்தி, தங்களது ஓட்டுநரைக் கடத்தியதாகச் சிறுவனின் தாத்தா மீதும் வழக்குப் பதிவானது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x