Published : 20 Mar 2024 06:25 AM
Last Updated : 20 Mar 2024 06:25 AM
தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் வருகைப்பதிவு அதிகரித்திருப்பதோடு, அவர்களின் கற்றல் திறனும் மேம்பட்டிருப்பதாக மாநிலத் திட்டக் குழு வெளியிட்டிருக்கும் தகவல் மகிழ்ச்சியளிக்கிறது. மார்ச் 1ஆம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கியதையடுத்து, ஒரே வாரத்தில் 80,076 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ள நிலையில், அண்மையில் வெளிவந்துள்ள இந்தப் புள்ளிவிவரம் மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.
வறுமையும் பட்டினியும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்குத் தடையாக இருக்கக் கூடாது என்கிற நோக்கத்தில் தமிழகத்தில் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. காலை உணவுக்கும் அதை நீட்டித்து, இந்தியாவின் முன்னோடித் திட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் முதல் கட்டமாக 2022-2023இல் 36 அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...