Published : 06 Mar 2024 06:25 AM
Last Updated : 06 Mar 2024 06:25 AM
கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இதில் ஈடுபட்ட குற்றவாளி குறித்து இதுவரை முழுமையான தகவல்கள் கிடைக்காத நிலையில், இதே போல் நிகழ்ந்த முந்தைய குண்டுவெடிப்புகளின் தொடர்ச்சியாக இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கக்கூடும் என்னும் ஊகங்களும் எழுந்திருக்கின்றன.
பெங்களூரு நகரின் புரூக்ஃபீல்டு பகுதியில் செயல்பட்டுவரும் ராமேஸ்வரம் கஃபேயில், மார்ச் 1 அன்று நண்பகலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர். குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் பிறந்த ராமேஸ்வரத்துக்குக் கெளரவம் சேர்க்கும் வகையில் ராமேஸ்வரம் கஃபே தொடங்கப்பட்டது; இங்கு எப்போதும் நல்ல கூட்டம் இருக்கும். இந்தச் சூழலில், பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த உணவகத்தில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டிருப்பதாகச் சந்தேகம் எழுந்திருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment