Published : 08 Feb 2024 06:20 AM
Last Updated : 08 Feb 2024 06:20 AM

ப்ரீமியம்
கருப்பை வாய்ப் புற்றுநோய்: விரைவான நடவடிக்கைகள் தேவை

தமிழ்நாட்டில் 2023இல் மட்டும் 8,500 பெண்கள் கருப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மொத்தம் 36,014 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்திருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. இந்தியாவில் 35 முதல் 44 வயதுக்கு உள்பட்ட பெண்களிடையே காணப்படும் புற்றுநோய் வகைகளில் கருப்பை வாய்ப் புற்றுநோய் இரண்டாம் இடத்தில் உள்ளது. 2023 நிலவரப்படி இந்தியாவில் 3.4 லட்சம் பெண்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தேசியப் புற்றுநோய் பதிவுத் திட்டம் தெரிவிக்கிறது.

உலக அளவில் இந்நோய் குறித்து 2000க்குப் பிறகே விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாகத்தான் இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பெண்களின் கருப்பை வாய்ப் பகுதியில் ஹியூமன் பாபிலோமா வைரஸ் (ஹெச்.பி.வி.) தொற்று ஏற்படுவதே கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கு முதன்மைக் காரணம். தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம் இந்த வைரஸ் தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம் என்பதால், அதற்கான ஆய்வுகள் தொடங்கப்பட்டன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x