Published : 30 Jan 2024 06:20 AM
Last Updated : 30 Jan 2024 06:20 AM
காசாவில் இனப்படுகொலை செயல்பாடுகளைத் தடுக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவு மிகுந்த நம்பிக்கையளிக்கிறது. போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கப்படவில்லை என்றாலும், காசா மக்கள் மீதான இனப்படுகொலைச் செயல்பாட்டைத் தடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு இஸ்ரேல் தள்ளப்பட்டிருப்பது, இன்றைய சூழலில் மிகவும் முக்கியமானது.
பல பத்தாண்டுகளாக, இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினை தொடர்ந்துவரும் நிலையில், 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தொடர் ஏவுகணைத் தாக்குதல் தற்போதைய பிரச்சினைக்கு முக்கியக் காரணமானது. இதில் இஸ்ரேலைச் சேர்ந்த 1,139 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...