Published : 15 Jan 2024 06:20 AM
Last Updated : 15 Jan 2024 06:20 AM
சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தமிழ்நாட்டின் முதன்மையான அறிவுத் திருவிழாவான சென்னை புத்தகக் காட்சி, இன்னும் சில ஆண்டுகளில் 50ஆம் ஆண்டினை எட்டவிருக்கிறது. இந்நிலையில், தமிழ்ப் பதிப்புச் சூழலைச் சர்வதேசத் தரத்துக்கு உயர்த்தும் நோக்கில், தமிழ்நாடு அரசு முன்னெடுத்திருக்கும் இந்தப் பன்னாட்டுப் புத்தகக் காட்சி, பாராட்டத்தக்க வகையில் வளர்ந்துவருகிறது.
பன்னாட்டுப் புத்தகக் காட்சி என்பது ‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்த'லுக்கும் ‘திறமான புலமையெனில் வெளி நாட்டார் அதை வணக்கஞ் செய்ய’ வழிவகுத்தலுக்குமான ஏற்பாடு ஆகும். ‘இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்’றுவதற்கான ஒரு சாளரத்தையும் பன்னாட்டுப் புத்தகக் காட்சி திறந்துவிடுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment