Published : 26 Dec 2023 06:20 AM
Last Updated : 26 Dec 2023 06:20 AM
சொத்துக்குவிப்பு வழக்கில், தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த க.பொன்முடிக்கும் அவருடைய மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இத்தீர்ப்பு ஓர் எச்சரிக்கை மணியாய் அமைந்திருப்பதாகவே சொல்ல வேண்டும். 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில், உயர்கல்வி மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பொன்முடியையும் அவருடைய மனைவி விசாலாட்சியையும் 2016இல் விசாரணை நீதிமன்றம் விடுவித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து 2017இல் லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment